
நினைத்தால் எதையும் சாதிக்கலாம் - இந்த
நிலத்தையே கைக்குள் அடக்கிலாம்
வெற்றி என்பது உனக்குள்தான் - பெரு
வேதனை ஏனடா உரம் கொளடா!
(நினைத்தால்)
பாய்மரக் கப்பலில் உலகளந்தான் - அந்த
பனிமலை சென்று கொடி பொறித்தான்
எரியும் நெருப்பையே எரித்தவன்தான் - இவ்
விரி நிலத்தில் பெயர் பதித்தவன்தான்
(நினைத்தால்)
ஏழ்மை என்பது பனித்துளிதான் - ஒரு
கீழ்நிலை என்பது இடைநிலைதான்
உழைப்பினை செய்யடா உயர்படிதான் - எந்த
ஊருக்கும் நீ இனி முதல் வரிதான்
(நினைத்தால்)
வானத்தைப் பார் அதற்கெல்லை இல்லை - வான்
நிலவினில் நுழைவதற் கென்ன தொல்லை
மானத்தை நாட்டிடத் தடைகள் இல்லை - மன
ஊனத்தை போக்கிடு பகைகள் இல்லை
(நினைத்தால்)
இரா.திருமாவளவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக