புதன், 8 ஜூலை, 2009

அறியாமை பெற்றதுதான் அறிவென்பது

அறியாமை பெற்றதுதான் அறிவென்பது - அதைப்
புரியாமல் வாழ்வதுதான் புதிர் என்பது
(அறியாமை )

விழியாலே நீர்சிந்தி மனம் வாடலாம் - அந்த
விழிகொண்ட பிறர் உன்னை நகையாடலாம்
அழுதாலே மனத்தூய்மை பெறும் உண்மையை - மனம்
அறிவார்கள் சிலரேனும் நிலைத்தன்மையை !
(அறியாமை)

பொன்னோடு பொருள் யாவும் நிலையாகுமா - புகழ்
பொருந்தாத செயல் யாவும் பொதுவாகுமா?
அன்புக்குப் பகை என்றும் எதிர்ப்பாவதேன்? - இறை
அருள் எல்லாம் சிலர்க்கின்னும் இருளாவதேன்?
(அறியாமை)

நினைவாகும் ஒவ்வொன்றும் வினையாவதா? - அது
நிகழ்கின்ற காலத்தின் விதி என்பதா?
மனம் வேறு குணம் வேறு பொருள்தான் இங்கே! - இதை
மதியாலே உணர்ந்தாலே இருள்தான் எங்கே?
(அறியாமை)

பாவலர் திருமாலனார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக