வெள்ளி, 10 ஜூலை, 2009

திருமாலனாரின் பரவியல் கோட்பாடு

ஆங்கிலத்தில் "யுனிவர்சல் " என்பதையே தமிழில் "பரவியல்" என்கிறோம். சிலர் இதனைப் பரந்த மனப்பான்மை என்பர். பரந்த மனப்பான்மை பற்றி முதன் முதலில் கருத்து அறிவித்தவர்கள் தமிழர்களே ஆவர். அதற்குச் சில எடுத்துக் காட்டுகளைக் காட்டலாம்.

௧. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று புறநானூற்றில் கணியன் பூங்குன்றனாரும்
௨. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று திருமூலரும்
௩. தாமின்புறுவது உலகினபுறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார் என்று திருவள்ளுவரும்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தெளிவாகச் சொல்லிச் சென்றுள்ளனர் . முந்தைய காலத்தில் பிற இனத்தவர் அவர்களைத் தவிர்த்து மற்றவரை இழிவு படுத்தியே வந்துள்ளனர்.
பேய்கள்
பிசாசுகள்
மிலேச்சர்கள்
சூத்திரர்கள்
நாகரிகமில்லாதவர்கள்
என்றெல்லாம் பிற இனத்தவர் மாந்த நேயம் இல்லாமல் கூறி வந்த வேளை தமிழர் மட்டுமே உலகப் பொதுமையையும் பரவியல் கோட்பாட்டையும் வலியுறுத்தியுள்ளனர் என்பதை வரலாற்றைப் பார்த்தால் தெரிய வரும்.
தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக