வியாழன், 9 ஜூலை, 2009

மெய்யுணர்வு

௨0.0௭.௧௯௭௮ காலை ௧0.00 மணி அளவில் அன்பர் ஒருவர் மறைமலை அடிகளின் தொலைவில் உணர்தல் எனும் நூலைப் பற்றிப் பாவலர் ஐயா திருமாலனார் அவர்களிடம் கேட்ட ஐயத்திற்கு அளித்த விளக்கம்
ஐம்பெரும் பூதங்கள் கலந்ததே விண் வெளி என்றும் அதனுள் அமையப் பெறுவதே ஞாலமும் மற்றவையும் என்றும் இவ்வித நுணுக்கமாக அமைந்த விண்வெளியில் மிகவும் நுணுக்கமாக அமைந்ததே மனவெளி என்று அடிகளார் தம் நூலில் விளக்கப் படுத்தி இருந்தாலும் இவ்வுண்மை மெய்மத்தை கடந்த ௧0 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணர்ந்து வந்துள்ளேன் என்பதையும் மேலும் மன வெளி என்பது மன உணர்வேயாகும் என்றும் மன உணர்வென்றால் அது இருவகைப் படும் அதாவது மனத்திற்கு நன்மை தீமையைப் பகுத்துணர இயலாது என்பதால் இவை இரண்டு வகையான உணர்வுகளையும் ஐம்புலன்கள் வழி மனம் பெறும் ஆயினும் இவ்வாறு மனம் பெறுகின்ற உணர்வுகளில் நன்மை தீமை எனப் பகுத்துணர்ந்து நடுநிலையான நன்மையான உணர்வுவழி மனத்தை ஒடுக்குவதன் வழி மன உணர்வினை மெய்யுணர்வாகப் பெறலாம்.
மெய்யுணர்வாகப் பெற்றவர்கள் மனம் மிக நுண்ணிய காலவினைகளையும் உணர வல்லது என்று விளக்கியதோடு இவ்வாறு இம் மெய்யுணர்வு பெற்றோர்கள் மெய்யறிவாளர்கள் எனப்படுவர். இம் மெய்யறிவால் தம் மனத்துள் எழும் அனைத்து உணர்வுகளையும் தெள்ளிதின் அறிந்திட இயலும் . எவ்வாறு எனில் குழந்தை உணர்வு வழி ஏற்றத் தாழ்வில்லாததே. புறத்தே அதன் உருவ அமைப்பும் நிறமும் மாறுபாடாகத் தோன்றுமே தவிர அகத்தே எல்லாக் குழந்தைகளும் உணர்வூறும் வகையில் ஏறத்தாழ சமமே. சான்றாக பால் வேண்டுமென்று அழுவதிலும் சுற்றுச் சார்பு முரண்பாட்டால் அழுவதிலும் தங்களின் உணர்வை வெளிப்படுத்துவதில் குழந்தைகள் ஒரே மாதிரியாகவே இயங்கும் என்பது தெளிவு. அக்குழந்தை வளர வளர சுற்றுப்புறச் சூழல்களாலும் பழகும் நண்பர்களாலும் அதன் குணங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் தன்னளவில் தனது உணர்வில் மற்றவர்களோடு ஒன்றாக இருப்பதைக் காண முடியும். இதன் நுண்ம வேறுபாட்டையும் ஒருமை இயல்பையும் மெய்யறிவால் தனது உணர்வினை நடுநிலையான் உணர வல்ல மெய்யறிவாளர்க்குத தெளிவாகப் புரியும்.
தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக